கொழும்பில் நிலவும் பதற்றநிலை: இரு ஆர்ப்பாட்ட குழுக்களுக்கிடையே முறுகல்
கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இரண்டு குழுக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் ஆசிரியர்களின் இடமாற்றத்தை கண்டித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதே இடத்தில் மற்றுமொரு குழுவினர் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான சூழலில் அப்பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு இடையில் முறுகல் நிலை பதிவாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பில் கோட்டை புகையிரத நிலையம் உட்பட பல முக்கிய இடங்களுக்குள் பிரவேசித்து அந்த இடங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கோட்டை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், கோட்டை நீதவானினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.