வவுனியாவில் பதின்மவயது சிறுவன் மாயம்; கலக்கத்தில் பெற்றோர்
வவுனியாவில் சிறுவனைக் காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன் அபிஷேக் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்று முன்தினம் (09) காலை 04.30 மணிக்கு வீட்டில் உறங்கிய மகனை காணாத நிலையில் அப்பகுதி முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் பெற்றோரால் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தாயின் தொலைபேசி இலக்கம் 0761698019 அல்லது சிறுவனின் மாமாவின் தொலைபேசி இலக்கம் 0774909955 அழைத்து அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.