களுத்துறை மாணவியின் உயிரிழப்புக்கு முன் கடைசியாக தொலைபேசி அழைப்பை எடுத்த ஆசிரியர்
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள களுத்துறை மாணவி உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியும் இன்றைய தினம் (11-05-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள பெண் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பொலிஸாரின் விசாரணைகளின் போது, உயிரிழந்த மாணவிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவருக்கும் குறித்த மாணவிக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.