வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
நாட்டில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 90 ரூபாவாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு கோரி சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இன்று முதல் பால் மா பொதியின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை இன்றைய தினம் (27-03-2023) முதல் 90 ரூபாவாக குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், சில உணவக உரிமையாளர்கள் குறைந்த விலையில் பால் தேநீர் வழங்கப்படுவதில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரி, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இன்று (27-03-2023) நுகர்வோர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.