டீ பிரியர்களே டீ குடிக்கும் போது இந்த உணவுகளை தவிர்க்க வேண்டுமாம்
காலை எழுந்தவுடன் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை கழிக்கும்போது மிக சோர்வாக இருக்கும்போது என தேநீர் அருந்த பல காரணங்கள் உள்ளன.
காரணமே இல்லாமல் டீ குடிப்பவர்களும் உள்ளனர். இப்படி அனைத்து வகையான டீ பிரியர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
அனைவரும் சற்று அதிகமாகவே டீ (Tea) குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். நாம் டீ அருந்தும் வேளைக்கு ஏற்ப அது தனது விளைவைக் காட்டுகிறது.
காலை டீ தூக்கத்தை விரட்டுவது போல மாலை டீ ஆற்றலை தருகிறது. அதேசமயம் மதியம் அருந்தப்படும் தேநீர் வயிற்றை இலகுவாக்கும்.
ஆனால் தேநீர் அருந்துவதுடன் சில சமயங்களில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் சிலவற்றையும் தேநீருடன் உட்கொள்கிறோம்.
இவற்றை தனியாக உட்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. எனினும் தேநீருடன் சேர்த்து சாப்பிடும்போது அவை உடலுக்கு கேடான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
டீயுடன் சேர்த்து சப்பிட்டக்கூடாத சில உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சில உணவுகள் மற்றும் பானங்களை டீயுடன் தவறுதலாக கூட உட்கொள்ளக்கூடாது.
தேநீர் அருந்துவதுடன் ஆரோக்கியத்தையும் (Health) நன்கு கவனித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
எலுமிச்சை
எலுமிச்சை கலந்த தேநீர் அருந்துவார்கள். ஆனால் டீயையும் எலுமிச்சையையும் சேர்த்து குடிப்பது ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. தேநீரில் காஃபின் உள்ளது. இவை இரண்டும் சேரும் போது இரண்டின் விளைவுகளையும் இரண்டும் குறைக்கின்றன.
இது மட்டுமின்றி தேயிலையில் காணப்படும் சுவடு கூறுகள் மற்றும் எலுமிச்சை அமிலம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதன் காரணமாக உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். இதனால் வயிற்றில் எரிச்சல் மற்றும் பிடிப்புகள் ஏற்படும்.
மஞ்சள் கலந்த பொருட்களை சாப்பிட வேண்டாம்
தேநீரில் காஃபின் உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். இது குடித்த பிறகு ஆற்றலை வழங்குகிறது. மறுபுறம் தேநீருடன் மஞ்சள் கொண்ட எதையும் உட்கொண்டால் அது ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது.
ஏனெனில் மஞ்சள் சூடான ஒரு பொருளாகும். அப்படிப்பட்ட நிலையில் டீயுடன் மஞ்சள் கலந்த ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டால் உடலில் சூடு அதிகரிக்கலாம்.
இதன் காரணமாக உங்களுக்கு வியர்வை அல்லது தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
மேலும் இதனால் உடலில் வாயுத் தொல்லையும் உருவாகி பிரச்சனை ஏற்படலாம்.
வறுத்த தின்பண்டங்கள்
மழைக்காலத்தில் மக்கள் டீ, பக்கோடா போன்றவற்றை அதிகம் விரும்புவார்கள்.
பெரும்பாலும் டீயுடன் பொரித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆனால் பக்கோடா போன்ற டீப் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகள் தேநீருடன் சேர்த்து சாப்பிடும் போது தீங்கு விளைவிக்கும்.
பக்கோடாவில் உள்ள கடலை மாவு, ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது.
இதனால் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.