22 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மீன்!
ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியன் கடற்கரையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு அரிய "நடக்கும்" கைமீன் கண்டுபிடிக்கப்பட்டது. காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (CSIRO) இந்த அழிந்து வரும் மீன் இனத்தை கண்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இளஞ்சிவப்பு நிற மீன், (Pink Fish) முதன்முறையாகவும் கடைசியாகவும் 1999ஆம் ஆண்டு காணப்பட்டது. ஒரு காலத்தில் அதிகளவில் கடற்கரைகளில் தென்பட்ட இந்த மீன் இனம், பல வருடங்களாக Derwent Beach முகத்துவாரங்களில் மட்டும் காணப்படும் அளவிற்கு இந்த இனம் அழிந்துள்ளது. இது நான்கு முறை மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டாஸ்மன் ஃபிராக்ச்சர் மரைன் பூங்காவில் எடுக்கப்பட்ட ஆழ்கடல் கமரா பதிவில் அரியவகை மீன்களை கண்டதாக ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 2012ஆம் ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த மீன் இனம் ஆபத்தான நிலையில் உள்ள அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
ஆங்லர்ஃபிஷ் குடும்பத்தைச் சேர்ந்த மீன், ஆழமற்ற நீர் இனமாக நம்பப்பட்டது, ஆனால் சமீபத்திய பார்வை தாஸ்மேனியாவின் தெற்கு கடற்கரையிலிருந்து 120 மீட்டர் ஆழத்தில் காணப்பட்டுள்ளது. இந்த இனங்கள் அதிக அளவிலான "கைகளை" கொண்டுள்ளன, அவை கடற்பரப்பில் "நடக்க" செய்கின்றன. அவர்களுக்கு நீந்தவும் தெரியும்.
டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் அண்டார்டிக் மற்றும் கடல்சார் ஆய்வுகள் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் நெவில் பாரெட் மற்றும் அவரது குழுவினர் பவளம், இரால் மற்றும் மீன் வகைகளை ஆய்வு செய்வதற்காக கடல் பூங்காவின் கடற்பரப்பில் ஒரு தூண்டில் கேமராவை இறக்கியுள்ளனர். அப்போதே இந்த மீன் வகை கமராவில் பதிவாகியுள்ளது.
அதன்பின் எடுக்கப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் இப்போது டாஸ்மானிய கடற்கரை பகுதிகளில் இந்த மீன்கள் தென்பட்டுள்ளன.