மனைவியை பயமுறுத்த வானத்தை நோக்கி சுட்டவருக்கு நேர்ந்த கதி
ஒரு வீட்டிற்கு அருகில் வந்து வானத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, குடியிருப்பாளர்களைப் பயமுறுத்திய ஒருவர், நேற்று மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரின் மனைவி சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அவரை விட்டுச் சென்றுவிட்டார், பக்கத்தில் உள்ள வீட்டில் 13 ஆம் திகதி விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வயலில் மறைந்திருந்த கணவன்
தற்போது கொழும்பில் இருக்கும் பிரிந்து சென்ற தனது மனைவி அங்கு இருப்பார் என்று நினைத்து விருந்துக்கு வந்த சந்தேக நபர், ஆக்ரோஷமாக நடந்து கொண்டு துப்பாக்கியால் வானத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மராவ கஹம்பனவைச் சேர்ந்த சந்தேகநபர், ஒரு வயலில் மறைந்திருந்த போது, துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.