திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் கைதிகள் தொடர் போராட்டம்
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழ் கைதிகள் தமக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழ் கைதிகளின் போராட்டம் இன்றுடன் 38 நாட்களைக் கடந்துள்ளது.
எமது போராட்டம் இன்றுடன் 38 ஆம் நாளை கடந்து செல்கிறது. ஆனால், எங்களுக்கான முடிவு மட்டும் மூடுமந்திரமாகவே இருக்கின்றது. மேலும், இன்று எமது போராட்டம் சங்கிலித் தொடர் போராட்டமாகத் தொடர்கிறது. இப் போராட்டத்தை ஊடக நண்பர்களும் மற்றும் அனைத்து தமிழ் உறவுகளும் எங்களுக்காக குரல் கொடுங்கள் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் நாங்கள் ஏந்தியிருக்கும் பதாகைகளை அவதானித்தால் எம் நிலை புரியும் என்றும் தங்களின் நிலையை அறிந்து, எங்களுக்கான விடுதலையை வழங்குமாறு தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் போராட்டகாரர்கள் கூறியுள்ளனர்.