சாணக்கியன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு

Batticaloa People's Liberation Organisation of Tamil Eelam Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Sahana Dec 27, 2024 08:38 PM GMT
Sahana

Sahana

Report

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தங்கள் கட்சி தலைவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துவதாகவும், சாணக்கியன் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று (27) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடருந்து மார்க்கத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

தொடருந்து மார்க்கத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையின் பின்னனியில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ஐவர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஐந்து வருட தடுப்புக்கு காவலுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எவ்வித ஆதாரமும் அற்றவை என்பதை சுட்டிக்காட்டி அவர்களை நிரபராதிகள் என கனம் மேல் நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்திருந்தது.

சாணக்கியன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு | Tamil Eelam Party Legal Action Against Chanakyan

இவ் வழக்கில் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானவர்களில் எமது கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதல் முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் ஒருவராவார்.

இந்நிலையில் குறித்த கௌரவ நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலைக்கு காரணமானவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் அவர்கள் அடிக்கடி சித்தரித்து வசைபாடி வருவதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்தோடு அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையை வைத்து கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் போன்றவர்கள் அரசியல் பிழைப்பு நடாத்துவதானது அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் ஆன்மாவை கேவலப்படுத்தும் ஈனச்செயலாகும்.

சாணக்கியன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு | Tamil Eelam Party Legal Action Against Chanakyan

எந்த வேளையிலும் அரசியல் காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாக சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை நோக்கி சுட்டுவிரல் நீட்டுவது குறித்த படுகொலைக்குரிய உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கிலானதா? அத்தகைய திசை திருப்பும் முயற்சியொன்றில் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் அவர்கள் ஈடுபடுகின்றாரா? என்கின்ற சந்தேகங்களும் எல்லோருக்கும் எழுந்திருக்கின்றது.

எது எப்படியிருப்பினும் அவரது உண்மைக்கு புறம்பான, அரசியல் அவதூறு பேச்சுக்கள் எமது கட்சித் தலைவர் அவர்களின் சுய கௌரவத்தை கேள்விக்குள்ளாக்குவதையும் எமது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதனையும் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

கௌரவ நீதிமன்றினால் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் மீண்டும் குற்றவாளி என சித்திரித்து உண்மைக்கு புறம்பாக, மக்களிடையே பேசிவருவதானது கௌரவ நீதிமன்றத்தினுடைய தீர்ப்பைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் இலங்கையின் நீதித்துறையின் மாண்பை அவமதிக்கின்ற செயலாகும்.

உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு!

உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு!

எனவே பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் அவர்களின் நீதிமன்ற அவமதிப்புக்கெதிரான செயற்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோருவதுடன், நாமும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை தொடரவுள்ளோம்.

எது எவ்வாறு இருப்பினும் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலைக்குரிய உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் எவர் ஒருவர் சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்றாரோ அவர் எந்தவிதமான பாரபட்சம் இன்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மிக உறுதியாக உள்ளது. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் நாசா விண்கலம்

புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் நாசா விண்கலம்

சாணக்கியன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு | Tamil Eelam Party Legal Action Against Chanakyan

சாணக்கியன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு | Tamil Eelam Party Legal Action Against Chanakyan

மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US