யாழில் கடலட்டைகளுடன் சந்தேக நபர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகளுடன் 17 சந்தேக நபர்கள் நேற்று (03) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்கள், மணியத்தோட்டம், உதயபுரம், குருநகர் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 21 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரகள் கடலுக்கு கொண்டு சென்ற நான்கு படகுகள், சுழியோடி உபகரணங்கள், பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகள் என்பவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடடிக்கைக்காக யாழ்ப்பாண நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.