களுத்துறை நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு
களுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேக நபர் ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சந்தேக நபர் கொள்ளை மற்றும் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் பொலிஸ் ஜீப்பில் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் கதவைத் திறந்ததும் அவருடன் கைவிலங்கிடப்பட்ட மற்றைய சந்தேகநபர் முகத்தில் தாக்கி கைவிலங்குகளை கழற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றில் கடமையாற்றியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள் அவர்களை துரத்திச் சென்ற போதும் சந்தேக நபர் அவர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக அளுத்கம பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.