9 ஏ சித்தி பெற்ற மாணவனை மண்ணென்னை ஊற்றி எரித்ததில் கைதான சந்தேக நபர்
2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற மாணவன் ஒருவனை தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கண்டி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (29 ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைக்கு அடிமையான ஒருவரால் தீக்கு இரையாக்கப்பட்ட மாணவன் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பிட்டிய மீகனுவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம்
சனிக்கிழமை (26ஆம் திகதி) இரவு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை கும்பல் ஒன்று தீக்கிரையாக்கியது தெரிய வந்துள்ளது.
17 வயதுடையவரின் கைகள் மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
கண்டி பொலிஸாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.