முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17 ஆம் ஆண்டு; மறக்குமா தமிழர் நெஞ்சம்
இலங்கையில் உள்ளநாட்டு போரின் இறுதி காலகட்டத்தில் சிங்கள படைகளுடன் சேர்ந்து அன்னிய சக்திகளும் தமிழின படுகொலையை அரங்கேற்றிய நாளை நினவுகூரும் வகையில் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் உலகெங்க்கும் வாழும் ஈழ தமிழ் மக்களால் அனுசரிக்கப்படுகிறது.
2009 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களும், அதிலிருந்து மீண்டவர்களும் அனுபவித்த இன்னல்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

தன்னாட்சி உரிமைக்காக போராடிய ஈழ தமிழர்களை கொன்று குவித்து, போர் முடித்து வைக்கப்பட்ட நாள் தான் மே.18. அப்போது நெருக்கடியான போர் சூழலில் தமிழ் மக்களின் உயிரை காப்பாற்றியது, உப்பில்லாத அரிசி கஞ்சிதான். அதனை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்காலில் ஆண்டு தோறும் கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்படும்.
அந்த வகையில் மே.12 தொடங்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று வரை கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிற நிலையில், இன்று இறுதி நாள் ஆகும். ஈழ தமிழ் மக்களின் நெஞ்சங்களில் மாறாத வடுவாக முள்ளிவாய்க்கால் துயரம் அமைந்துள்ளது.
திட்டம்மிட்டு அரங்க்கேற்றப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து 17 ஆண்டுகள் இன்று கடத்த போதும் இன்னும் எம்மக்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்பது பெரும் தியரம் ஆகும்.