பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய சந்தேக நபர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பு
மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கொழும்பு, உருகொடவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் குருணாகல், நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் என்பதுடன், சந்தேக நபர் கொஹுவளை, கிருலப்பனை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபரிடமிருந்து 05 மடிக்கணினிகள் உள்ளிட்ட பல்வேறு இலத்திரனியல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.