நீதிமன்றத்திற்கு சென்றபோது தப்பியோடிய சந்தேகநபர்
கிராண்ட்பாஸ் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பில் மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரே இவ்வாரு தப்பிச்சென்றுள்ளார். சம்பவத்தில் அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இவர் ஏனைய சந்தேக நபர்களுடன் மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.