யாழ்.போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்ற சத்திர சிகிச்சை!
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இரண்டு துண்டுகளாகத் துண்டிக்கப்பட்ட கை சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தனது சமூகவலைத்தளப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சிகிச்சை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, நீண்ட மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக மீண்டும் கை பொருத்தப்பட்டு இளைஞன் வீடு திரும்பியுள்ளார்.
குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றி என வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.