விமான நிலையத்தில் திடீரென கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு!
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட கடுமையான கொவிட் வகையான ஒமிக்ரோன் பிறழ்வு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
ஒமிக்ரோன் புதிய மாறுபாடு ஏற்கனவே உலகம் முழுவதும் பரவிவிட்டதாக கூறப்படும் நிலையில் , சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய நிலையில் நாட்டை மூடுவதால் எந்த பயனும் ஏற்படாது என தெரிவித்த அவர், புதிய தொற்று நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை மக்கள் சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுவது மட்டுமே தற்போதைய நிலைமையில் எடுக்க வேண்டிய பிரதான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் தற்போதைய நிலைமையை சரிவர அடையாளம் கண்டு அதன்படி வாழாவிட்டால் நாட்டில் நோய் பரவுவதை தடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மக்கள் தேவையில்லாமல் பயணம் செய்யாமல், அதை தவிர்ப்பது முகக் கவசம் பயன்படுத்துவது போன்ற விடயங்களைச் செய்வது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.