திடீரென மாயமான பாலகிருஷ்ணன் நிரேஸ்; தீவிர விசாரணையில் இறங்கிய பொலிஸார்!
வவுனியாவில் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி முதல் காணாமல்போன பாலகிருஷ்ணன் நிரேஸ் எனும் இளைஞன் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சில சந்தேக நபர்கள் மற்றும் அவரது நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர் .
ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வவுனியா குருமன்காட்டிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு சென்ற பாலகிருஷ்ணன் நிரேஸ் காணாமல் போயுள்ளதாக அவரது தாயரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இதன் விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் இதன் உண்மைத் தகவல்களை காணாமல் போன இளைஞனின் தாயார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே மாயமான இளைஞர் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வவுனியா வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த காட்சிகள் சி.சி.ரிவி காணொளியில் தெரிவாகின்றது. எனினும் குறித்த வர்த்தக நிலையத்திற்குள் இளைஞர் சென்றமை காணப்படவில்லை .
அப்படியே வெளியே சென்றதையே காணமுடிகின்றது . அது தொடர்பாக தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகின்றது.
அவரது நண்பர்கள் மற்றும் சந்தேக நபர்கள் சிலரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .
அவரது தொலைபேசி இலக்கம் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பன கண்காணிக்கப்பட்டு வருகின்றதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்தி
வவுனியாவில் கடத்தப்பட்ட இளைஞர் ; ஆதாரங்கள் இருந்தும் கண்டுகொள்ளாத பொலிஸ்; தாயார் கண்ணீர் கோரிக்கை!