கையடக்க தொலைபேசியால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ; உயிர் தப்பிய உயர்தரப் பரீட்சை மாணவன்
மாத்தளை சீகிரியா, கலகொட்டுவ பகுதியில் வீடொன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டு, வீட்டின் ஒரு அறை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
சார்ஜருடன் கையடக்க தொலைபேசி இணைக்கப்பட்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர் பயன்படுத்திய அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மாணவர் அறையில் இல்லை என தெரியவந்துள்ளது.
எனினும், மாணவரின் மடிக்கணினி, உடைகள் மற்றும் கல்விக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.