கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சாரதி ; திடீர் உயிரிழப்பு
கொழும்பில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு முச்சக்கர வண்டிக்குள்ளேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் போலியகொடை பிரதேசத்தை சேர்ந்த சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டி அவரது கட்டுப்பாட்டை மீறி பல வாகனங்களுடன் மோதுண்டமையினால் பரபரப்பான நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மயக்கம் ஏற்பட்டு சாரதி ஸ்டீயரிங் மீது விழுந்ததால், முச்சக்கரவண்டி வீதியின் மற்றைய பாதையை நோக்கி வட்டமிட்டு பல வாகனங்கள் மீது மோதி பின்னர் ஜீப் வண்டியில் மோதுண்டு முச்சக்கர வண்டி நின்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.