ஜனாதிபதியை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி
இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமிக்கும் (Subramanian Swamy) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியன் சுவாமி (Subramanian Swamy), இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருந்தவர். அதோடு, இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கான இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியவராவார்.
அதொமட்டுமல்லாது பொருளாதார நிபுணரும் புள்ளியியல் வல்லுநருமான சுப்ரமணியன் சுவாமி (Subramanian Swamy), பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் போது, விரிவுரையாளராகவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமியை (Subramanian Swamy) சந்திக்கக் கிடைத்தமையிட்டு, ஜனாதிபதி இதன்போது அவருக்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.