பாக்கெட் பால் அருந்திய கிளிநொச்சி முன்பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில்!
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் முன்பள்ளி ஒன்றில் பாக்கெட் பால் குடித்த 12 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துட்டும் திட்டத்தினூடாக நிறுவனமொன்று பாக்கெட் பால் வழங்கி வருகின்ற்து. பாக்கெட் பால் மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து மாணவர்கள் முன்பள்ளியில் வாந்தியெடுத்துள்ளனர்.
வயிற்றோட்டம் வாந்தி
இதனையடுத்து உடனடியாக மாணவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் வைத்தியர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
இதன்போது மாணவர்களுக்கு வயிற்றோட்டம் வாந்தி ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் முன்பள்ளி மாணவர்கள் அருந்திய பாக்கெட் பாலின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.