மது கடையில் நிற்கும் மாணவிகள்; சமூக வளைத்தளங்களில் பரவி வரும் புகைப்படம்
மாணவிகள் சிலர் மது கடையில் நிற்கும் காட்சி தற்போது சமூக வளைத்தளங்களில் பரவி வருகின்றது.
அந்த மாணவிகள் அங்கு சென்ற காரணம் குறித்து எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.
பணத்தை மாற்றிக்கொள்வதற்காக சென்றிருக்கலாம் என சிலர் கூறி வரும் நிலையில் பணத்தை மாற்ற ஏனைய கடைகளுக்கு மாணவிகள் செல்வார்களே தவிர இவ்வாறான இடத்திற்க்குச் செல்வதற்கு வாய்ப்பே இல்லையென இன்னுமொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இப் புகைப்படம் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடையொன்றுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில், சட்டவிரோதமான மதுபாவனை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறியே இருபாலாரும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது.
ஆகையால் தங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்களும், மாணவர்கள் தொடர்பில் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்துமாறு கூறப்படுகின்றது்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.