உறவினர்களுடன் நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
உறவினர்களுடன் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் பிற்பகல் (18-04-2024) காசல்ரீ நீர்த் தேக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த, டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும் 18 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்த மாணவன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நோட்டன் பொலிஸார் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது.
உடற் கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவசாலையில் வைக்கபட்டுள்ளது.
நாளை காலை உடற் கூற்று பரிசோதனை கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் இடம் பெற்ற பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.