பரிசளிப்பு விழா மேடையில் அதிபருக்கு மாணவி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ; வைரலாகும் காணொளி
கம்பஹாவின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பேசியமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
அந்த மாணவி பரிசளிப்பு விழா மேடையில் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம்
குறித்த மாணவி பாடசாலை சார்பில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகளாக தாம் வெற்றிகளை குவித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச போட்டிகளிலும் குறித்த மாணவி தனது திறமையை வெளிப்படுத்தி இருந்ததாகவும் இதன்போது குறிப்பிட்டார்.
பரிசளிப்பு விழாவின் ஒத்திகை ஒன்றுக்கு தாம் வராத காரணத்தினால் அதற்கு தண்டனையாக தமக்கு கிடைக்க வேண்டிய விருதினை அதிபர் தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளார்.
விழா மேடையில் பாடசாலையின் அதிபரை விமர்சனம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.