எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி நாட்டின் பல பகுதிகளில் போராட்டம்!
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக சிலாபம் - கொழும்பு வீதி காக்கப்பள்ளியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது அத்துடன், ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் சேவை, ரம்புக்கனை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை, மத்துகம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



