கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கொழும்பில் போராட்டம்
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மன்னார் - மடு கோவில்மோட்டை விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போ து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் கோவிட் என்று ஓடி ஒளியாமல் ஏழை விவசாயிகளின் பிரச்சனைக்குத் தீர்வு கொடு, ஆளுநரிடம் காணி பெறுவதற்கான அனுமதி கோராமல், காணி தங்களுடையது என கூறும் அராஜகத்தை மத குருக்கள் நிறுத்துங்கள், போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோவில் மோட்டை விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து போராட்ட களத்திற்குச் சென்ற ஜனாதிபதியின் செயலாளரிடம் சட்டத்தின் பால் வடக்கு மாகாணம் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கலாக எழுதப்பட்டிருந்த மகஜர் ஒன்றை ஜனாதிபதியின் செயலாளரிடம் விவசாயிகள் கையளித்துள்ளனர்.