யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

jaffna lock down
By Vethu May 13, 2021 01:24 PM GMT
Vethu

Vethu

Report

யாழில் பயணத் தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயண கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது நேற்றைய தினம் மாத்திரம் 67 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் தேசிய மட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட சில நிபந்தனைகளை கட்டுப்பாடுகளையும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமுல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது அந்த வகையில் இன்று இரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை கொரானா ஒழிப்பு மத்திய நிலையத்தினால் பயணதடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தப் பயணத் தடை காலத்தில் பொது போக்குவரத்து முற்றாக தடை படும் கடைகள் மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டு இருக்கும் ஆனால் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆகவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்களும் தங்களுடைய வீடுகளில் இருந்து இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மேலும் இந்த பயணத் தடை காலத்தில் பலர் தமக்கு ஊரடங்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுகின்றார்கள்.

பொதுமக்கள் ஒரு விடயத்தினை உணர்ந்து கொள்ள வேண்டும் இந்த பயணத்தடை என்பது பொதுமக்கள் இந்த நிலமையினைஅனுசரித்து வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதனால் வெளியில் சகல நடவடிக்கைகளும் செயலிழந்து காணப்படும் எனவே பொது மக்கள் வெளியில் நடமாட வேண்டிய தேவை இருக்காது அரசு அலுவலகங்கள் இயங்காது பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது எனவே இந்த மூன்று நாட்களும் பொதுமக்களில் வீடுகளில் இருக்க வேண்டியது அவசியமாகும். அத்தோடு வைத்திய சேவை மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் செயற்படும் வைத்தியசாலைக்கு அல்லது அத்தியாவசியமான சேவைக்கு வெளியில் செல்வோர் பயண கட்டுப்பாட்டுடன் சென்று வர முடியும்.

மேலும் அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்கள் வெளி மாகாண போக்குவரத்தில் ஈடுபடுவோர் அதாவது உணவுப்பொருட்கள் எரிபொருள் காஸ், அவர்கள் ஏற்கனவே உரிய முறையில் விண்ணப்பித்து பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கு என வழங்கப்பட்டுள்ள அனுமதியினை பயன்படுத்தி பயணிக்க முடியும்.

தற்பொழுதுள்ள இந்த இடர் நிலைமையினை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேச செயலர் மட்டத்திலும் பிரதேச செயலர்கள் பிரதேச குழுக்கள் ஊடாக தற்போதுள்ள நிலைமையினை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கிறார்கள் குறிப்பாக அத்தியாவசிய சேவைகளை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள்.

அந்த வகையிலே பிரதமர் அலுவலகம் ஒரு விசேட வேண்டுகோளை விடுத்துள்ளது கடந்தமுறை ஊரடங்கு நேரத்தில் பின்பற்றிய நடைமுறையை போன்று இந்த நிலைமையிலும் அதனை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பிரதேச மட்டங்களில் அந்த நிலைமை செயற்படுத்தப்படும். வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி அதேபோல் நாவற்குழி நெற்களஞ்சியம் போன்றன இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

வட்டுக்கோட்டை சிகிச்சை நிலையத்தில் ஏற்கனவே தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் நாவற்குழி நெற்களஞ்சியத்தினை சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்குரிய ஏற்பாடுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. நாவற்குழி நெற்களஞ்சியத்தை சிகிச்சை நிலையமாக மாற்றினால் அதில் 650க்கும் மேற்பட்ட தொற்றாளர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியும் அத்தோடு வட்டுக்கோட்டையிலே 200 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனைவிட வடக்கு சுகாதாரப் பிரிவினர் 4 ஆதார வைத்திய சாலைகளை அதாவது தெல்லிப்பளை, பருத்தித்துறை, ஊர்காவற்துறை ,சாவகச்சேரி இந்த நான்கு ஆதார வைத்தியசாலைகளில் ஒரு விடுதியை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு ரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியினருடன் சுகாதார பிரிவினர் வடக்கில் சேவையினை முன்னெடுத்து வருகின்றது இந்த நிலைமை ஒரு சவாலான நிலைமையாக காணப்படுகின்றது எனவே பொதுமக்கள் இந்த சுகாதார கட்டுப்பாடுகளை மிகவும் அனுசரித்து தற்போது உள்ள அபாய நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும் .

மேலும் இந்த நிலையிலே போக்குவரத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்திற்கு பொதுமக்கள் அனுமதி கோருவதை நிறுத்திக் கொள்ளுங்கள் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பயணங்களை மட்டும் படுத்தி கொள்ளுங்கள். அத்தோடு எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அடையாள அட்டை இலக்கங்களை பயன்படுத்தி அவர்கள் தமது சேவையினை பெற்றுக் கொள்ளலாம் அத்தோடு அலுவலகங்களுக்கு செல்வோர் தமது அடையாள அட்டையைக் காட்டி தமது பயணங்களைப் தொடரமுடியும் அத்தோடு தமது வடபகுதியை பொருத்தவரைக்கும் ஒரு பெரிய சவாலான விடயம் காணப்படுகின்றது

அதாவது சட்டவிரோதமான முறையில் எமது அயல் நாட்டிலிருந்து எமது பகுதிக்கு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது பொதுமக்களுக்கு மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் அந்த நிலைமை அனுசரிக்கப்படாத நிலைமை கவலை அளிக்கின்றது. எனவே பொதுமக்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு பாதிப்பினை ஏற்படுத்த முன்வராது தமது குடும்பத்தையும் சமூகத்தையும் எமது மாவட்டத்தினை தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் .

அத்தோடு உங்களுடைய பகுதி கிராம சேவகர் மற்றும் அப்பகுதி அரச உத்தியோகத்தர்களின் உதவியுடன் தொற்றிலிருந்து உங்கள் பகுதியினை பாதுகாக்கவேண்டும். எனவே இந்த பயண கட்டுப்பாடானது தொற்றினை கட்டுப்படுத்துவதற்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது .எனவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்கள் இந்த பயண கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் . அரசாங்கத்தின் சுகாதார கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள், கைதுகள் இடம்பெற்றுவருகின்றன

எனவே யாழ்ப்பாண மாவட்டத்திலும் அரசின் சுகாதார சட்ட திட்டங்களுக்கு எதிராக செய்யப்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலைமையினை அனுசரித்து தம்மையும் தமது மாவட்டத்தினையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
அகாலமரணம்

கொக்குவில், Zürich, Switzerland

16 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Wassenberg, Germany, Markham, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
38ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US