வவுனியாவில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு; இராணுவம் - பொலிசார் குவிப்பு
இன்று யாழ்பாணத்திற்கு சீனத்தூதுவர் கீ சென்ஹொங் விஐயம் செய்யவுள்ள நிலையில் அவரது வருகைக்காக வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சீனாவின் தூதுவர் கீ சென்ஹொங், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று வடக்கிற்கு விஐயம் செய்துள்ளார்.
கூறித்த நிவாரணப் பொருட்கள் சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் வழங்கப்படவுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு இன்று காலை வருகைதந்த அவர் அங்கிருந்து யாழ்நோக்கி பயணமானார்.
இந்நிலையில் அவரது வருகைக்காக வவுனியா நகரப்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளிலும், வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.