யூ-டியூப் காணொளிகளை பார்த்து தான் பெற்ற சிசுவை கழுத்தை நெரித்து.... பாடசாலை மாணவி செய்த பாதக செயல் !
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், யூ-டியூப் காணொளிகளை பார்த்து குழந்தையொன்றை பெற்றெடுத்த பின்னர் அதனை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள பாடசாலையொன்றில் 9 ஆம் தரத்தில் கற்றுவரும் சிறுமிக்கு சமூகவலைத்தளம் மூலம் இளைஞர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நேரில் சந்தித்த சந்தர்ப்பமொன்றில், இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
யூ-டியூப்பில் காணொளி பார்த்து பிரசவம்
சிறுமியிடம் ஏற்பட்ட மாற்றத்தை சுத்து அது குறித்து பெற்றோர் வினவியபோது, தனக்கு சில உடல்நல பிரச்சினைகள் இருப்பதாக கூறி சமாளித்துள்ளார்.
அதோடு வைத்தியசாலைகளுக்கு சென்றால் வீண் பிரச்சினைகள் ஏற்படுமென்று கருதிய சிறுமி, கடந்த 3 ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த வேளையில், யூ-டியூப்பில் காணொளிகளை பார்த்து தாமாகவே குழந்தையை பிரசவித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிறந்த சிறிது நேரத்தில் குழந்தை அழுதுள்ள நிலையில், சத்தம் கேட்டால் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அந்த சிறுமி சிசுவின் கழுத்து நெரித்துக் கொலை செய்து குழந்தையின் உடலை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.
பணி முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் தாயார் வீட்டின் பல இடங்களில் இரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு சிறுமியிடம் விசாரித்தபோது, மாதவிடாய் காரணமாக இரத்தக்கறை ஏற்பட்டதாக கூறுயுள்ளார்.
எனினும், சந்தேகம் கொண்ட தாயார் தொடர்ந்தும் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை தாயிடம் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சம்பவம் தொடர்பில் தாயார் பொலிஸாரிடம் முறைபாடளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சிசுவின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் , சிறுமியையும் வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.