அமெரிக்க ஆய்வுக் கப்பல் விடுத்த கோரிக்கை நிராகரித்த இலங்கை அரசு
இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க ஆய்வுக் கப்பல் ஒன்று விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவையான வசதி
இலங்கை கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன் சம்பந்தப்பட்ட கப்பல் எரிபொருள், தண்ணீர் மற்றும் உணவு மற்றும் குடிநீர் வசதிகளை பெறுவதற்காக இலங்கை கடற்கரைக்குள் நுழைவதற்கு அனுமதி கோரியுள்ளது.
கப்பலை உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், சர்வதேச கடற்பரப்பில் உள்ள மற்றுமொரு கப்பல் மூலம் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கப்பல் இந்தியாவின் சென்னை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரிய போதிலும் இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
சீன ஆய்வுக் கப்பல் ஒன்று நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கை முன்னதாக நிராகரிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.