இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி தலைவி சிட்னி தண்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம்
தற்போதைய பெண்கள் கிரிக்கெட் அணியின் சிறந்த வீராங்கனையாக திகழும் இலங்கை அணித்தலைவி சமரி அதபத்து, அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கின் (WBBL) அடுத்த 3 சீசன்களுக்கான சிட்னி தண்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்கு முன்னைய தொடரில் (2023-24) சிட்னி தண்டர்ஸ் அணிக்காக அவர் விளையாடினாலும், அது காயமடைந்த வீராங்கனை ஒருவரை பிரதிநிதித்துவபடுத்துவதற்காகவே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும் அந்த தொடரில் சமரி அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடியதுடன், 5 அரை சதங்களுடன் 552 ஓட்டங்கள் எடுத்தார்.
இது ஒரு இன்னிங்ஸின் சராசரி 42.46 ஆக காணப்பட்டதுடன், பெண் துடுப்பாட்ட வீராங்கனை ஒருவர் பெற்ற இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாகும். அதுமட்டுமின்றி, அவர் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அவரது சிறப்பான திறமையால், போட்டியின் நாயகிக்கான விருதை சமரி பெற்றுக்கொண்டார்.
எவ்வாறாயினும், 8 அணிகள் பங்குபற்றிய இப் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தையே பிடித்தது. நடைபெறவுள்ள பிக் பாஷ் மகளிர் லீக் இந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.