வெளிநாடொன்றில் தொடர்ச்சியாக பணியாற்றிய இலங்கையர்; பரிதாபகரமாக பலி!
தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசோங்கிலுள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றிய இலங்கையொருவர் உயிரிழந்துள்ளதாக கொரியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த இலங்கையர் தொடர்ந்து 18 மணி நேரம் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹுவாசோங் சியோபு பொலிஸ் நிலையத்தின் அறிக்கைக்கு அமைய , இலங்கையைச் சேர்ந்த 33 வயதான தொழிலாளி ஜூலை 25 ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில் ஹ்வாசோங் நகரத்தின் பால்டன் டவுன்ஷிப்பிலுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இறந்துள்ளார்.
தட்டை மாற்ற முயற்சிக்கும் போது அவர் எண்ணெய் அழுத்த அமுக்கியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் போது அருகில் வேறு இரு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருந்தனர், இருப்பினும் பாதிக்கப்பட்டவர் அலறுவதைக் கேட்கும் வரை அவர்கள் விபத்து பற்றி அறிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளரிடம் அறிவிக்கப்பட்ட நிலையில் , அவர் 119 எனும் அவசர பிரிவிற்கு அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அழுத்தியில் வாயு வெளியேற்றப்பட்ட நிலையில், அதில் எண்ணெய் அழுத்தம் இருந்த நிலையில் அது திடீரென செயற்பட தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்துள்ள குறித்த நபர் மூன்று மாதங்களுக்கு முன்னரே அத்தொழிற்சாலையில் இணைந்துள்ளார். உயிரிழந்தவர் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் மூவரும் தொடர்ச்சியாக 18 மணி நேரத்திற்கும் அதிகமாக பணிபுரிந்து வந்துள்ளனர், முதல் நாள் காலை 9 மணியிலிருந்து . அவர்கள் வேலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரிய தொழிற்சாலையின் முகாமையாளர் விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இரவு 11 மணியளவில் தொழிற்சாலையை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை உற்பத்தியில் பற்றாக்குறை சிக்கல் இருப்பதால், தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்ததா என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தொழிலாளர் சட்டத்தில் ஏதேனும் மீறல்கள் ஏற்பட்டுள்ளதா என பொலிஸார் ஆராய்வதுடன் தொழிற்சாலையில் CCTV காட்சிகளை பகுப்பாய்வு செய்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
அத்துடன், விசாரணைகளுக்கு அமைய தொழிற்சாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் எனவும் அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.