இந்தியாவில் 4 இலங்கையர்கள் அதிரடி கைது! வெளியான பரபரப்பு காரணம்
காரிலிருந்து பெருந்தொகை பணத்தை திருடிய குற்றச்சாட்டில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்றின் கூற்றுப்படி, பஞ்சாபில் உள்ள லூதியானா காவல்துறை, ஒரு கும்பலுடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளது.
அவர்கள் காரிகளின் கண்ணாடிகளை உடைத்து இந்திய நாணய பெறுமதியில் சுமார் 57.40 லட்சம் ரூபாவை திருடியதாகக் கூறப்படுகிறது.
தமிழ் பேசுபவர்களென கூறப்படும் குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 46.50 இலட்சம் ரூபாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் புது டில்லி மற்றும் பிற மாநிலங்களில் தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வந்தனர் என்றும் கடந்த காலங்களில் பல திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.