இந்திய ரூபாவை வைத்திருப்பதற்கு இலங்கையர்களுக்கு அனுமதி!
இலங்கையர்கள் பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த அனுமதியை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையை சமாளிக்க இலங்கைக்கு இந்த நடவடிக்கை உதவும் என்றும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
அதேசமயம் இதன் காரணமாக அமெரிக்க டொலர்களை பயன்படுத்தாமல் இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.
எனினும், இலங்கை மத்திய வங்கி, இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இதுவரை அறிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
You My Like This Video