மத்திய கிழக்கிலிருந்து வந்த இலங்கை பெண் அதிரடி கைது
சுமார் 27 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இலங்கை பெண்ணொருவர் நேற்று (23) காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
இவர் நேற்று காலை 07:30 மணியளவில் டுபாயிலிருந்து 'பிளை டுபாய்' விமான சேவைக்குச் சொந்தமான FZ-579 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தின் கிரீன் சேனல் ஊடாக பொருட்களைக் கடத்திச்செல்ல முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தயாரிப்பான 'மென்செஸ்டர்' ரகத்தைச் சேர்ந்த 90 கார்ட்டூன் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண்ணைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.