கனடாவில் துப்பாக்கி சூடு...இலங்கை தமிழ் இளைஞன் கைது; பொலிஸார் பகீர் தகவல்!
கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொரன்ரோ பிக்கரிங் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரசன்னா பாலசுப்பிரமணியம் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை
ரொரன்ரோவில் கடந்த மாதம் 12ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில் ஒரு வீட்டை குறி வைத்து நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது வீடு சேதமடைந்ததுடன், யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
குற்றம் செய்ய சதி செய்தல் மற்றும் ஆயுதத்தால் தாக்குதல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணை இன்னும் தொடர்ந்து வருவதாகவும், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகக்கூடும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.