நாடு திரும்ப முயன்ற இரு இலங்கை தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கதி!
தமிழகத்தின் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் வந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் இருவரும் சென்னை முகவரிகள் கொண்ட, இந்திய கடவுச்சீட்டுடன் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந் நிலையில், ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரண்டுமே போலியான கடவுச்சீட்டுக்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கங்கா சுந்தரதாசன் (46), சொர்ணகலா சுந்தரேசன் (22) என்ற பெண்களின் பயணங்களையும், குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
சுற்றுலா பயணிகள் விசா
மேலுன் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து, சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு சென்று நிரந்தரமாக தங்கி விட்டனர்.
இதனையடுத்து நாடுதிரும்ப முயன்ற அவர்கள் , பணம் கொடுத்து போலியான இந்திய கடவுச்சீட்டுக்கள் பெற்றுள்ள யாழ்ப்பாணம் செல்ல முயன்றமை தெரிய வந்தது.
மேலும் 2 பெண்களையும் கைது செய்த விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.