தீயில் பற்றி எரியும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் வீட்டின் மீதும் பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு கலகக்காரர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை, பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டதுடன், புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த நிஷாந்தவின் வீடு முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் உள்ளடங்களாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஒரு சிலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் வீடுகள், மக்களால் தாக்கப்பட்டுள்ளன. ரமேஷ் பத்திரவின் வீட்டுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. சனத் நிஷாந்தவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.