குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையருக்கு மூன்று மனைவியாம்!
போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய நேற்று புதன்கிழமை (02) நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சடலம் தொடர்பில் விசாரணை தொடங்கியபோது, இறந்தவரின் மனைவிகள் என கூறி மூன்று பெண்கள் அங்கு பிரசன்னமாகியதாக குவைத் ஊடகங்கள் தெரிவித்தன.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்
தூக்கிலிடப்பட்டவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடையவராவார். இவருக்கு கடந்த 27 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சடலம் தொடர்பில் விசாரணை தொடங்கியபோது, இறந்தவரின் மனைவிகள் மூவர் பிரசன்னமாகியுள்ளனர்.
இவர்களில் ஒருவர் ஓமானில் தொழில் புரிபவரென தெரிய வருகிறது. அப்பெண் தூக்கிலிடப்பட்ட நபரை திருமணம் செய்து 17 வருடங்கள் ஆவதாகவும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் கூறப்படும் நிலையில் மற்றைய இருவர் தொடர்பிலான தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் , அங்கு நிலவும் கடும் வெப்பம் காரணமாக குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனை பணிகள் இன்று வியாழக்கிழமை (03) வரை ஒத்திவைக்கப்பட்டது.