இலங்கையின் கிரிகெட் பிரபலம் மஹேல ஜயவர்தன தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் புதிய பயிற்சியாளருமான 44 வயதான மஹேல ஜயவர்தன தனது முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹேலவின் திருமணம்சில தினங்களுக்கு முன்னர் தென் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த தகவலை பிரபலமான சிங்கள தளம் ஒன்று வெளியிட்டுள்ளது அதன்படி டிசம்பர் 18ஆம் திகதி அவர்கள்து திருமணம் நடைபெற்றதாகவும் நடாஷா மகலந்த என்பவரை மஹேல திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹேல, கிறிஸ்டினா மல்லிகா சிரிசேனவை 2005-2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் அவர்களது ஒரே மகளான லேடி சான்சாவிற்கு தற்போது 8 வயதாகிறது. 2018 இல் மஹேல தனது மனைவியைப் பிரிந்த பின்னர், மகள் அவரது பராமரிப்பில் உள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களைக் கடந்த உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மஹேல, இன்னும் சில காலம் இலங்கை பயிற்சியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு, மகள் பிறந்த பிறகு குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவேன் என்று கூறி, எதிர்பாராத விதமாக விடைபெற்றார்.
அதன் பின்னர் அவர் ஐபிஎல் மும்பை அணிக்காக நிறைய நேரம் செலவிட்டார் மற்றும் இந்த ஆண்டு அனைத்து உறவுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார் எனவும் செய்திகள் கூறுகின்றன. அதேவேளை கடந்த காலங்களில் மஹேல குடும்பத்துடன் நேரம் குறைவாகவே செலவிடுவதாகவும், திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் பரவின.
இலங்கை-டென்மார்க் பெற்றோருக்குப் பிறந்த கிறிஸ்டினா, தொழிலில் பயண ஆலோசகர். அவர் டென்மார்க்கில் பிறந்து இரண்டு வயதாக இருக்கும் போது விடுமுறையில் தனது பெற்றோருடன் இலங்கைக்கு வந்து 1990 இல் நிரந்தரமாக குடியேறி மஹேலவை ஒரு விருந்தில் சந்தித்த பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இவர்களது திருமண பிரச்சனைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இருப்பினும், 2018-2019 பருவத்தில், சமூக ஊடக கணக்குகளில் குடும்ப விவரங்களில் மாற்றங்கள் மற்றும் புகைப்படங்கள் நீக்கப்பட்டதால் மஹேலவின் குடும்ப நெருக்கடி குறித்து விளையாட்டு ரசிகர்கள் அதிகம் பேசி வந்தனர்.
இதற்கிடையில், 2021 அக்டோபரில், கொரோனா காரணமாக 135 நாட்களாக தனது மகளைப் பார்க்கவில்லை என மஹேல கவலை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மஹேலவின் புதிய திருமணம் நடாஷா மகலந்தவுடன் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. நடாஷா ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரியும் போது அவரை சந்தித்ததாக நம்பப்படுகிறது.
எனினும் நடாஷாவை பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதேவேளை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள மஹேல, இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.