இந்தியாவின் நடுக்கடலில் மிதந்த இலங்கை படகு
Tamil nadu
Sri Lanka
India
Sri Lanka Fisherman
By Viro
தமிழகத்தில் இலங்கை படகு ஒன்றை இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழை பகுதியில், நடுக்கடலில் இலங்கை பைபா் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில் நேற்று (07) மிதந்துள்ளது.
அப்பகுதிக்குச் சென்ற மீனவா்கள், அந்த படகை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அந்த படகில், இலங்கை அரசின் முத்திரை காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் போது தட்டாா்மடம் பொலிஸார் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் அதிகாரிகள் அந்த படகை ஆய்வு செய்ததுடன், இந்த படகு சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடை்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US