மீண்டும் பரவும் கோவிட் ; இலங்கை விமானநிலையத்தில் தீவிர கண்காணிப்பு
2019 டிசம்பர் மாதம் உலக மக்களின் பேரழிவுக்க்கு காரணமான கோவிட் தொற்று தற்போது மீண்டும் பல நாடுகளில் பரவி வருகின்றது.
இந்நிலையில் இந்தியா , சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தற்போது புதிய கொவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், இலங்கை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இந்தியாவில் புதிய கோவிட் தொற்று
நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில்,
புதிய கோவிட் தொற்றால் நாட்டில் இன்னும் ஆபத்தான சூழ்நிலை இல்லை என்றாலும், விமான நிலையப் பகுதியில் ஏற்கனவே தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
"சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் சில எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. நாங்கள் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தில் நடந்தது போன்ற அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஆனால் ஏற்கனவே விமான நிலையத்திலிருந்தே அந்த விடயம் தொடர்பில் தலையிடப்பட்டு வருகிறது என்றார்.
அதேவேளை இந்தியாவில் இருந்து புதிய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,009 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த நோயால் 4 பேர் இறந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.