ரஷ்ய உக்ரைன் போரால் விழிபிதுங்கும் இலங்கை விமானப்படை!
ரஷ்ய தயாரிப்பான இலங்கை விமானப்படை பயன்படுத்தி வரும் எம்.ஐ.17 போக்குவரத்து உலங்குவானூர்திகளை பழுப்பார்ப்பதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியுள்ள நிலையில் இலங்கை விமானப்படையினர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான யுத்தம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பழுதுப்பார்ப்பதற்கு தடை
அத்துடன்அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன ரஷ்யா எம்.ஐ.17 உலங்குவானுர்திகளை நேட்டோ நாடுகள் பழுதுப்பார்ப்பதற்கு தடைகளை விதித்துள்ளது.
அதேவேளை இலங்கை உலங்குவானூர்திகள் கடந்த 20 ஆண்டுகளாக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான லித்துவேனியாவில் பழுதுப்பார்க்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை காரணமாக இலங்கை விமானப்படை பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் எம்.ஐ. 17 உலங்குவானூர்திகள் பழுதுப்பார்ப்பது தடைப்பட்டுள்ளது.