வன்முறை சம்பவங்கள்: பிக்குகள் உட்பட 14 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 03 பிக்குகள் உள்ளிட்ட 14 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலையின் போது, பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் சொத்துக்கள் பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
இதன்போது, ராஜபக்ஷ பரம்பரையின் பூர்வீக வீடு மற்றும் ராஜபக்ஷ சகோதரர்களின் பெற்றோருடைய நினைவுச் சின்னம் என்பன பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் ராஜபக்ஷ தரப்பு கொடுத்திருந்த முறைப்பாட்டிற்கமைய, ராஜபக்ஷ குடும்பம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த வேகந்தவல ராஹுல தேரர், வனாத்தமுல்லே உதித தேரர், தேவாலேகம பிரேமரத்ன தேரர் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்றைய தினம் (31-05-2022) வலஸ்முல்லை நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான வழக்கு நடைபெற்றபோது, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.