இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி ; உலக வங்கி அனுமதி
முதலீடுகளை ஊக்குவித்தல், போட்டித்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிப்பதற்காக உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் குழு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு அனுமதி அளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை வெற்றிகரமாக மீட்சியடைந்துள்ளதை உலக வங்கி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

பொருளாதார மீட்சி
நாட்டின் தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி, நிதி மற்றும் சுற்றுலாத் துறைகளின் சிறப்பான வளர்ச்சி காரணமாக 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக, உலக வங்கி இலங்கையை மீண்டும் ‘உயர் நடுத்தர வருமானப் பொருளாதார’ (Upper-Middle-Income Economy) நாடாக வகைப்படுத்தியுள்ளது.
எனினும், இலங்கை இந்த வருமான வரம்பை மிகக் குறைந்த அளவிலேயே கடந்துள்ளது என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கையின் இந்த பொருளாதார மீட்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்கள் குழு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை அங்கீகரித்துள்ளது.
நாட்டில் முதலீடுகளை அதிகரித்தல், போட்டித்திறனை மேம்படுத்துதல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.