பகலிரவு ஆட்டத்தில் பஞ்சரான இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் குளித்தது. கேப்டன் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் (4), ரோகித் சர்மா (15) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஹனுமா விகாரியும், விராட் கோலியும் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
எனினும் இந்த கூட்டணியை இலங்கை பந்துவீச்சாளர்கள் முறியடித்தனர். ஹனுமா விகாரி 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஜெயவிக்ரம பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடிய விராட் கோலியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் தனஞ்சய டி சில்வாவின் எல்பிடபிள்யூவில் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் தவிர அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் மோசமான ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் 92 ஓட்டங்களில்பேட்டிங் செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 59.1 ஓவரில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை தரப்பில் ஜெயவிக்ரம அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கரணரத்னே (4), குசல் முண்டிஸ் (2) களமிறங்கினர். அணியின் மூத்த வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் சற்று தாக்குப்பிடித்தார்.
அவர் 43 ஓட்டங்கள் எடுத்து பும்ராவிடம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பின்னர் அவர்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 30 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 86 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட இலங்கை 166 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. டிக்வெல்லா 13 ஓட்டங்களுடனும், எம்புல்டெனியா ஓட்டம் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.