பொலிஸாரின் நடவடிக்கைகள் வெட்கத்திற்கு உரியது! மஹேல ஜயவர்தன விமர்சனம்
ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் வெட்கத்திற்கு உரியது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன (Mahela Jayawardene) விமர்சித்துள்ளார்.
இதனை அவரது அதிகாரப்பூர்வ டுவிற்றர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
If the people were violent and damaging public property they can be arrested but no excuse to shoot at them? Is this democracy? Is this law of the land? Who ever responsible for this must be bought to justice… SL police shame on you…?? https://t.co/ufh4ETowsk
— Mahela Jayawardena (@MahelaJay) April 19, 2022
ஆர்ப்பாட்டங்களில் வன்முறையாக செயற்பட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் பொதுமக்களை கைது செய்யாமல் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதுதான் ஜனநாயகமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.