இலங்கையில் எதிர்வரும் மூன்று தினங்களில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!
இலங்கையில் எதிர்வரும் 3 தினங்களில் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்ப்படுத்துவது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 24, 25ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெடிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, 24ஆம் திகதி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பிற்பகல் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
25ஆம் திகதி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன், 26ஆம் திகதி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.