சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்? கேள்வி எழுப்பிய சஜித்

Sri Lanka Parliament Sajith Premadasa Sri Lanka Child Abuse
By Shankar Nov 08, 2022 04:14 PM GMT
Shankar

Shankar

Report

"இலங்கையில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவருதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், அரசிடமிருந்தோ அல்லது கல்வி அமைச்சிலிருந்தோ எவ்வித பாதுகாப்பும் அங்கு வழங்கப்படுவதாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையா?"  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின்போது கேள்வி எழுப்பினார்.

சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்? கேள்வி எழுப்பிய சஜித் | Sri Lanka International Schools Child Abuse Sajith

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார.

அவர் மேலும் கூறுகையில்,

"நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்த நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்? கேள்வி எழுப்பிய சஜித் | Sri Lanka International Schools Child Abuse Sajith

அத்துடன், இந்த நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழுவும் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் இந்நாட்டு சிறுவர்களைப் பாதுகாத்து அவர்களுக்குப் பாதுகாப்பான நாளைய எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுக்க அரசு அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்? கேள்வி எழுப்பிய சஜித் | Sri Lanka International Schools Child Abuse Sajith

இதன் பிரகாரம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, பின்வரும் கேள்விகளுக்கு அரசிடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

  • கடந்த 10 ஆண்டுகளில்,18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் பலாத்காரம், கொடுமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு எத்தனை முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த முறைப்பாடுகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எவ்வாறு செயற்பட்டது என்பது குறித்தும், குறிப்பாக பெறப்பட்ட தண்டனைத் தீர்ப்புகள் தொடர்பான தகவல்கள் தொடர்பான விரிவான அறிக்கையை இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா? சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம், செயல்முறையில் அரசாங்கம் திருப்தியடைகின்றதா?
  • சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும், அத்தகைய துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் ஒரு தேசியக் கொள்கையை உருவாக்கும் நோக்கத்துக்காக 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டம் மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தச் சட்ட அடிப்படையில் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை நிறுவப்பட்டுள்ளதா அவ்வாறில்லையெனில், தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை ஏன் விரைவில் அமுல்படுத்தக் கூடாது?
  • சிறுவர்கள் மற்றும் நியாய சீர்திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் தற்போதைய முன்னேற்றம் யாது? அதனை எப்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவென எதிர்பார்க்கப்படுகின்றது?

  • 2021 பெப்ரவரியில், சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனையை நிறுத்துவதற்கான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை சிறார் நியாய நடைமுறையில் உள்ளடக்குவதற்கு அரசு போதுமான அளவு ஈடுபாட்டை காண்பித்துள்ளதா? மேலும்,சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு பரிந்துரைத்தபடி, தண்டனைச் சட்டத்தின் 82, 341 (i) மற்றும் 308 (A) ஆகிய பிரிவுகளில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?

  • பாதிக்கப்பட்ட பல சிறுவர்களின் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மீண்டும் அதே பணியகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது உண்மையா? அப்படியானால், இந்த நியமனம் எந்த அடிப்படையில் நியாயமானது?

  • சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறும் பட்சத்தில் அரசிடமிருந்தோ அல்லது கல்வி அமைச்சிலிருந்தோ எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படுவதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது உண்மையா? இந்தப் பாடசாலைகளிலும் எமது நாட்டுப் பிள்ளைகளே கல்வி கற்கும் நிலையில், கல்வி அமைச்சின் முறையான ஒழுங்குமுறைக்கு இந்தப் பாடசாலைகள் ஏன் உட்படுத்தப்பட வில்லை?" - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Narantanai, யாழ்ப்பாணம், மெல்போன், Australia

25 Sep, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Frankfurt, Germany, Toronto, Canada

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US